கற்பழிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை !! (உலக செய்தி)

Read Time:3 Minute, 16 Second

ராஜஸ்தான் மாநிலம் வைஷாலி நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு பணியில் இருந்த பொலிஸ்காரர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அதேபகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

ஆனால் அவரது புகாரின் பேரில் பொலிஸார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பெண் ஆவேசமடைந்தார். எனது புகாரை ஏன் விசாரிக்க மறுக்கிறீர்கள்? என கூறி அங்கிருந்த பொலிஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார். திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு அலறித் துடித்தார். இதைப்பார்த்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த பெண்ணும், அவர் புகாரில் கூறிய நபரும் ஒத்த கருத்துடன் நெருங்கி பழகி வந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே புகாரில் கூறப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது கற்பழிப்பு புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதனால் பொலிஸார் விசாரணையை தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே புகார் கூறப்பட்ட நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதையறிந்து தான் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

தனது புகாரின் பேரில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தற்கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்பு நலன் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன?! (மருத்துவம்)
Next post குடியிருப்பு பகுதியில் விழுந்த இராணுவ விமானம் – 15 பேர் பலி!! (உலக செய்தி)