அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பொலிஸார்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 13 Second

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், தற்போதைய ஜனாதிபதி இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் ஜனாதிபதியும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது.

ஜனாதிபதி இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25 ஆம் திகதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்றதாக இவா மோரல்ஸ் அறிவித்திருந்தார். இந்த முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து ஜனாதிபதி இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, மீண்டும் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அவசர கூட்டத்தை நடத்த வேண்டி போராட்டக்காரர்களுடன் பொலிஸாரும் வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். தலைநகர் சூக்ரேயின் சாண்டா குரூஸ் டி லே நகரில் போராட்டக்காரர்களுடன் பொலிஸார் பேரணியாக சென்றதை உள்ளூர் பத்திரிக்கையான எல் டெபெர் வெளியிட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியா பற்றிய பலரும் அறியாத 15 உண்மைகள்!! (வீடியோ)
Next post பிக்பாஸ் தர்ஷனுக்கு இப்படி ஒரு லக்? (சினிமா செய்தி)