போர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 36 Second

இந்திய இராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

மொத்தம் 13 இலட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.

“இராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022/23 ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தமில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை மனதில் கொண்டு ஆயுத அதிகரிப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு முன்பு இராணுவத்தில் போதிய அளவில் தளவாடங்கள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து, இராணுவத்துக்குப் புதிதாக 12,890 கோடி செலவில் போர் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக, 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, உள்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் ஆண்டுக்கு 1,700 கோடி மதிப்பிலான பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை, வரும் 2022/23 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்வதற்கான பணிகளைப் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.” என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்!! (வீடியோ)
Next post கொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா! (உலக செய்தி)