சேலம் அரவாணிக்கு அமெரிக்க அரவாணி பிரசாரம்
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அரவாணி ராதிகாவுக்கு ஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த அரவாணி எலிசபெத் பிரசாரம் செய்து வருகிறார். சேலம் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் அரவாணி ராதிகா. இவர் முன்பு தேமுதிகவில் இருந்தார். அந்தக் கட்சி சார்பில் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் நிற்க சீட் கேட்டார். ஆனால் கேப்டன் கட்சி சீட் கொடுக்கவில்லை. இதனால் கடுப்பான ராதிகா, சுயேச்சையாக போட்டியிடுகிறார். தனக்கு ஆதரவாக ஏராளமான அரவாணிகள் புடை சூழ பிரசாரம் செய்து கலக்கி வருகிறார் ராதிகா.
அவர்களில் எலிசபெத்தும் ஒருவர். 56 வயது அரவாணியான எலிசபெத் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் தொண்டு நிறுவனம் ஒன்றை எலிசபெத் நடத்தி வருகிறார். ராதிகா போட்டியிடுவதை அறிந்த அவர் இங்கு வந்து ராதிகாவுக்காக பிரசாரம் செய்கிறாராம்.
ராதிகாவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்கிறார் எலிசபெத்.