மிரட்டும் கொரோனா – இதுவரை 202,880 பேர்பலி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 27 Second

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 28 லட்சத்து 97 ஆயிரத்து 883 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 18 லட்சத்து 69 ஆயிரத்து 801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 172 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 880 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 53,789
இத்தாலி – 26,384
ஸ்பெயின் – 22,902
பிரான்ஸ் – 22,648
இங்கிலாந்து – 20,381
ஜெர்மனி – 5,877
துருக்கி -2,706
ஈரான் – 5,650
சீனா – 4,632
பிரேசில் – 3,762
பெல்ஜியம் – 6,917
கனடா – 2,462
நெதர்லாந்து – 4,409
சுவிஸ்சர்லாந்து – 1,599
அயர்லாந்து – 1,063
ஸ்வீடன் – 2,192
மெக்சிகோ – 1,221

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திரிகோணாசனம்!! (மகளிர் பக்கம்)
Next post 96 பொலிஸாருக்கு கொரோனா !! (உலக செய்தி)