ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை !! (உலக செய்தி)
Read Time:1 Minute, 17 Second
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமாவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதை அடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அசாத் லஹாரி என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating