ஆர்மேனியா – அஜர்பைஜான் மோதல்களுக்கான காரணம் என்ன? (கட்டுரை)

Read Time:6 Minute, 26 Second

முன்னைய சோவியத்யூனியனின் இரு குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலிற்கான முக்கிய காரணமாக நகர்னோ கரபாக் பிராந்தியம் குறித்த தசாப்தகால முறுகல்நிலை காணப்படுகின்றது.

.1980களின் பிற்பகுதியிலும் 90ன் ஆரம்பத்திலும் இரு நாடுகளும் இரத்தக்களறி மிக்க மோதல்களில் ஈடுபட்டிருந்தன.
நகர்னோ கரபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதி எனினும் அதன் பிரஜைகள் பெருமளவிற்கு ஆர்மேனியர்கள்.

1980 களில் சோவியத்யூனியனில் இடம்பெற்றிருந்த குடியரசுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்தவேளை , நகர்னோ கரபாக் மக்கள் ஆர்மேனியாவின் ஒருபகுதியாக காணப்படுவதற்கு விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.
இதன் காரணமாக மோதல் வெடித்து 1994வரை நீடித்தது.
அதன் பின்னர் நகர்னோ கரபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது ஆனால் அதன் கட்டுப்பாடு ஆர்மேனிய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஆர்மேனிய வம்சாவளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
பல வருடங்களாக உலக நாடுகள் இரு தரப்பிற்கும் இடையில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதன் காரணமாக சமாதான உடன்படிக்கைகள் எவையும் ஏற்படவில்லை.

ஆர்மேனியா கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு அதேவேளை அஜர்பைஜான் முஸ்லீம்கள் பெரும்பான்மையினத்தவர்களாக காணப்படுகின்றனர்.
அஜர்பைஜான் துருக்கியுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ள அஜர்பைஜானிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
ரஸ்யாவிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆர்மேனியா அஜர்பைஜான் நகர்னோ கரபாக் பகுதி தென்கிழக்கு ஐரோப்பாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பல நூற்றாண்டுகளாக பல தரப்பினர் இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்- இவர்களில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உள்ளனர்.
நவீன கால ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் 1920களில் சோவியத்யூனியனின் ஒரு பகுதியாக மாறின.
நகர்னோ கரபாக் ஆர்மேனிய இனத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியாக காணப்பட்டது.
எனினும் சோவியத்யூனியன் அந்த பகுதியின் கட்டுப்பாட்டை அஜர்பைஜான் அதிகாரிகளிடம் வழங்கியது.
நகர்னோ கரபாக்கில் உள்ள ஆர்மேனியர்கள் இதனை ஏற்க மறுத்ததுடன் தங்கள் பகுதியின் கட்டுப்பாட்டை ஆர்மேனியர்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தனர்.
எனினும் அது சாத்தியமாகவில்லை.
1980களின் பிற்பகுதியில் சோவியத்யூனியன் வீழ்ச்சியடையதொடங்கியவேளையே நகர்னோ கரபாக்கின் பிராந்திய நாடாளுமன்றம் ஆர்மேனியாவின் ஒரு பகுதியாக மாறுவதற்காக வாக்களித்தது.
இதனை ஏற்க மறுத்த அஜர்பைஜான் பிரிவினைவாத இயக்கத்தினை ஒடுக்குவதற்கு முயற்சித்தது.
இது இனங்களுக்கு இடையிலான மோதலாக மாறியது.
ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் சோவியத்திலிருந்து பிரிந்த பின்னர் முழுமையான யுத்தம் மூண்டது.

பலஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் ,இரு தரப்பும் இன சுத்திகரிப்பு படுகொலைகளில் ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டுகளும் வெளியாகியிருந்தன.
நகர்னோ கரபாக்கை ஆர்மேனிய படையினர் தமது படைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் 1994 இல் ரஸ்யாவின் மத்தியஸ்தத்தினால் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை காரணமாக நகர்னோ கரபாக் தொடர்ந்தும் அஜர்பைஜானிடமே காணப்படுகின்றது எனினும் அதன்கட்டுப்பாடு பிரிவினைவாத ஆர்மேனியர்களிடம் காணப்படுகின்றது.
ஆர்மேனியர்கள் அதனை நிர்வகிக்கின்றனர் ஆர்மேனியா அவர்களுக்கு ஆதரவளிக்கின்றது.

பூகோள அரசியல்
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பூகோள அரசியல் காரணமாக மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
நேட்டோ நாடான துருக்கியே முதன் முதலில் 1991 இல் அஜர்பைஜானின் சுதந்திரத்தை ஆதரித்தது.

இருநாடுகளும் ஒரே கலாச்சார பின்னணியைகொண்டுள்ளன,துருக்கி ஜனாதிபதி அஜர்பைஜானுக்கு தனது ஆதரவை வெளியிட்டு வருகின்றார்.
துருக்கி ஆர்மேனியாவுடன் இராஜதந்திர உறவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
1993 இல் நகர்னோ கரபாக் தொடர்பில் மோதல்கள் வெடித்தவேளை துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவாக ஆர்மேனியாவுடான எல்லையை மூடியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! (மருத்துவம்)
Next post பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது!! (அவ்வப்போது கிளாமர்)