உடலுக்கு பலம் தரும் சோயா பீன்ஸ்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 0 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சோயா பீன்ஸ், பச்சை பயறு ஆகியவற்றை கொண்டு உடலுக்கு பலம் கொடுக்க கூடிய கஞ்சி குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். சோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சோயா பீன்ஸ் புரதச்சத்து மிகுந்தது. கர்ப்பிணிகளுக்கு அற்புதமான உணவாகிறது. சோயா பீன்ஸ், பாசி பயறுவை பயன்படுத்தி சிறியவர்கள், பெரியவர்கள், நோயுற்றவற்றவர்களுக்கான பலம் தரும் கஞ்சி வகைகள் செய்முறைகளை காணலாம். சோயா பீன்சை பயன்படுத்தி உடலுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ், பால், வெல்லம்.

செய்முறை: சோயா பீன்சை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கஞ்சியை குடித்துவர உடல் பலம் பெறும். பல்வேறு நன்மைகளை கொண்ட சோயா புரதச்சத்து மிகுந்தது. மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வருவதற்கு காரணமான நச்சுக்களை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பச்சை பயறுவை பயன்படுத்தி நோயுற்றுவர்களுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, உப்பு, பால். செய்முறை: பச்சை பயறுவை நன்றாக வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதில் நீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு சேர்க்கவும். கஞ்சி பதம் வந்தபின் பால் சேர்க்கவும். இந்த பச்சை பயறு பால் கஞ்சியை குடித்து வர நோயுற்றவர்களின் உடல் பலம் பெறும்.
இந்த கஞ்சி எளிதாக ஜீரணம் ஆகும். பச்சை பயறு அற்புதமான உணவாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. சத்தூட்டம் நிறைந்தது. புரதம், மாவு சத்தை தருகிறது. உடலுக்கு பலம் கொடுத்து நோயில் இருந்து விடுபட வைக்கிறது. உடல் தேற்றியாக விளங்குகிறது. திட உணவு செரிமானம் ஆகாத நிலையில், கஞ்சியாக குடித்துவர உடல் ஆரோக்கியம் பெறும்.

சோயா பீன்ஸ் எலும்புகளுக்கு பலம் தரும். உடலுக்கு உரம் கொடுக்கிறது. ஊட்டச்சத்து மிக்கது. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.
கண்கட்டியை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் கண்கட்டி வருகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான அறையில் படுப்பது, உடலை குளிர்ச்சிப்படுத்தும் விதமாக தினமும் இருமுறை குளிப்பது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post தொண்டை வலியை சரிசெய்யும் ஆடாதோடை!! (மருத்துவம்)