ரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 43 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், இதயம் நுரையீரலுக்கு பலத்தை கொடுக்கவல்லதும், தோல்நோய்களை போக்க கூடியதுமான நறுவிலி மரத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நறுவிலி மரம். இதன் அனைத்து பாகங்களும் பயன் தருகிறது. இதன் பழங்கள் அற்புதமான மருந்தாகிறது. மூக்குச்சளி பழம் என அழைக்கப்படும் இது பசைப்போல ஓட்டிக்கொள்ளும் தன்மை உடையது. நறுவிலி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் நெஞ்சக சளி வெளியேறும். இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்கி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். புண்களை ஆற்றும்.

மேலும், புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதை மேல்பற்றாக போடும்போது தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தேனீராக்கி குடிப்பதால் நுரையீரல், இதயத்துக்கு பலம் தருகிறது. நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நறுவிலி பழம், சீரகம், பனங்கற்கண்டு.செய்முறை: நறுவிலி பழத்தை நசுக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர நெஞ்சக சளி வெளியேறும். இதயத்துக்கு பலம் தரும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும்.

நறுவிலி மரத்தின் இலைகளை பயன்படுத்தி நெஞ்சக சளி, ஆஸ்மா பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நறுவிலி இலைகள், மிளகுப்பொடி, தேன்.செய்முறை: நறுவிலி இலைகளை அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவர ஆஸ்துமா சரியாகும். நெஞ்சக கோளாறு, நுரையீரல் கோளாறு, குரல்வளையை பற்றிய நோய்கள் குணமாகும்.

நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நறுவிலி பழம், தேங்காய் எண்ணெய்.செய்முறை: நறுவிலி பழத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி மேல்பூச்சாக பூசிவர தேமல், படர்தாமரை, அரிப்புடன் கூடிய தோல் நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட எளிதில் கிடைக்க கூடிய நறுவிலியை பயன்படுத்துவதால் உடல்நலம் பெறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். வேர்கடலையின் முற்றாத இளம் பிஞ்சுகள் 5 முதல் 10 வரை எடுத்து அரைத்து தேனிலோ, வெண்ணெய்யிலோ குழைத்து ஓரிரு வேளை கொடுப்பதால் வயிற்றுபோக்கு வற்றிப்போகும். சீதபேதி சீக்கிரத்தில் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீன் ஏஜ் செக்ஸ்?!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்!! (மருத்துவம்)