நெஞ்செரிச்சலுக்கு கைகொடுக்கும் சீரகம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 24 Second

தினமும் ஒரு கப் பெருஞ்சீரக டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பையில் ஏற்படுகின்ற பிரச்னைகள் குணமாகும். மேலும் ஓரிரண்டு பெருஞ்சீரகத்தை வாயில் மென்று அசை போட்டு வர செரிமானமின்மையால் ஏற்படுகின்ற பிரச்னைகள் தீரும். மேலும் நெஞ்செரிச்சலுக்கு இது உடனடி தீர்வாக அமையும். ஹார்மோன் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். மேலும், பெருஞ்சீரகம் பாலுணர்வை தூண்டும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கும் பெருஞ்சீரக டீ நல்ல தீர்வாக அமையும். மெனோபாஸ் காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு பெருஞ்சீரகம் நல்லதொரு மருந்தாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை கொல்லக்கூடியது, பெருஞ்சீரகம். குடல்புழுக்களில் இருந்தும் விடுவித்துக்கொள்ள உதவுகிறது.

பாக்டீரியா போன்ற கிருமி நாசினிகளை அழிக்கக்கூடியது. இது குழந்தைகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு அரணாக இருக்கும். மேலும், வயிற்றில் உள்ள குடலிறக்க பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை உடனடியாகக் குணப்படுத்தும்.உடல் சோர்வு, உடல் நலமின்மை போன்றவற்றுக்குத் தீர்வு அளிக்கக்கூடியது. மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரலை குணப்படுத்த உதவி புரிவதோடு, மஞ்சள்காமாலைக்கும் மருந்தாக அமைகிறது. சிறுநீரக கற்களை அகற்றக்கூடியது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க துணைபுரியும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிவகை செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு பலம் தரும் வள்ளிக்கிழங்கு!! (மருத்துவம்)
Next post கொரோனா வைரஸ் நோயாளி என்ற சந்தேகத்தில் தாய் மருத்துவமனையில் அனுமதி- மாற்றுதிறனாளியான மகன் தற்கொலை- ஹோமாகமவில் சம்பவம்!! (கட்டுரை)