பெண் மலடு, கழிச்சல், தோல்நோயை போக்கும் பாகல்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 12 Second

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். அன்றாடம் புதுப்புது நோய்களால் பாதிக்கப்படும் சம்பவம் அன்றாட நிகழ்வாகி விட்ட நிலையில் அதற்கான எளிய தீர்வாக விளங்கும் இந்த பகுதியில் நாம் பாதுகப்பான, பணச்செலவில்லாத, வகையில் கோடை காலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் எப்பொழுதும் எளிதாக கிடைக்கும் பாகல் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட மருந்தாகிறது. ஹெச்ஐவி, எய்ட்ஸ் நோய்களை துரத்துகிறது. சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் பாகல் நாட்பட்ட டயாரியா எனப்படும் கழிச்சலை விரைவில் கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும். பித்த மேலீட்டாலும், சர்க்கரை நோயாலும் தோலில் ஏற்படும் எரிச்சல், அரிப்புக்கு கைமேல் பலன் தருகிறது. தோல் நோய்களை விரட்டி ேதாலுக்கு வலுவூட்டி பளபளப்பாக்குகிறது. இத்தனை பயன்களை தன்னுள்ளே அடக்கியிருக்கும் பாகல் மருத்துவம், பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

தோல் நோய்களை போக்கி, உள்ளங்ைக, பாதத்தில் ஏற்படும் எரிச்சலுக்கு பாகல்இலை தேனீர் மருத்துவம். இதற்கு தேவையானது பாகல் இலை ஒரு கைப்பிடி அளவு. செய்முறை: பாகல் இலையை பறித்து கழுவி சுத்தம் செய்து அதனை தண்ணீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை பிழிந்து எடுத்து மேல் தோல், மற்றும் எரிச்சல் அரிப்பு உள்ள இடங்களில் மேல்பூச்சாக தடவி வர பிரச்னை தீரும். இதனை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேனீராகவும் குடிக்கலாம். தொடர்ந்து பாகல்சாறு குடித்துவர ஹெச்ஐவி எய்ட்ஸ் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

இனி எந்த வித மருந்துகளுக்கும் கட்டுப்படாத கழிச்சலுக்கு பாகலை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் முறை. ேதவையாக பொருட்கள்: பாகல் இலைசாறு, சீரகம், நெய். செய்முறை: ஒரு வாணலியில் கால்தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும் அதில் சீரகப்பொடி கால் தேக்கரண்டி சேர்த்து வறுத்து அதில் கால் டம்ளர் அளவு பாகல் இலை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவைத்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் குடித்து வர கழிச்சல் கட்டுப்படும். சர்க்கரை நோய்க்கு பாகல் மருத்துவம். இதற்கு தேவையானவை: பாகற்இலை சாறு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி. செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள்பொடி, பெருங்காயதூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.

இனி மலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் பாகல் மருத்துவம். இதற்கு தேவையான பொருட்கள்: பாகற்காய் சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல்உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு தொடர்ந்து இதனை குடித்துவர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும். இனி பல்கூச்சம் மற்றும் வலியை போக்க மிளகுப்பொடி மற்றும் உப்பு கலந்து பற்றுப்போட பல் பிரச்னைகள் தீரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? (கட்டுரை)
Next post கல்லீரலை பலப்படுத்தும் நார்த்தங்காய்!! (மருத்துவம்)