இலங்கைக்கான இந்திய தூதர் அறிவிப்பு
Read Time:1 Minute, 19 Second
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நிரூபமா ராவை கடுமையாக விமர்சித்து இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பியும், அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே பேட்டி கொடுத்திருந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து நிரூபமா ராவை திரும்ப அழைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்தது. இதையடுத்த நிரூபமா ராவ் சீனாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது இலங்கைக்கான புதிய தூதராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாத் தற்போது சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருகிறார். விரைவில் இலங்கைக்கு அவர் சென்று தனது புதிய பொறுப்பில் சேருவார்.