சிறுநீரகப் பிரச்சனைக்கு மருந்தாகும் நன்னாரி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 11 Second

வெட்டி வேர், நன்னாரி இந்த பெயர்கள் அதன் வேர் வாசனையை நம் நாசியில் தடவும். சூட்டைத் தணிப்பதில் நன்னாரி பெரிய டாக்டர் என்றே சொல்லலாம். பல்வேறு சிறுநீரகப் பிரச்சனைகளுக்கும் நன்னாரி சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நன்னாரியில் பல்வேறு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளது. நன்னாரியை உடல் நோயகளுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது.

நன்னாரி வேரை இடித்து சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணப்பிரச்சனை குணமாகும். நன்னாரி வேரை ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் 2தம்ளர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் குடித்தால் வாத நோய்கள் தீரும். நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து காலை, மாலை, இரண்டு வேளையும் குடித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும். நன்னாரி, வெட்டிவேர் இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தம், உடல் சூடு தணியும்.

நன்னாரி சதகுப்பை இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் கரையும். நன்னாரி, தனியா, சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊர வைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும், இதயம் வலுவடையும். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீ எதோ தப்பு பண்ற !! (வீடியோ)
Next post நீரிழிவுக்கு மருந்தாகும் ஆவாரம் பூ!! (மருத்துவம்)