ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 29 Second

கீரைகளில் தண்டுக் கீரைக்குத் தனியிடம் உண்டு. ருசியிலும் சரி, அரிய மருத்துவக் குணங்களிலும் சரி. தண்டுக்கீரைக்கு நிகர் தண்டுக்கீரைதான்.

* காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தண்டுக் கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளகச் செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

* உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. தண்டு கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே தண்டுக் கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.

* கல்லீரல் பாதிக்கப்படுவதுதான் மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கெனவே சாப்பிடும் மருந்துகளோடு தண்டுக் கீரையை அடிக்கடி சமைத்து பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெறும்.

* குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. தண்டுக் கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

* திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது தண்டுக் கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெறும். அவற்றினுள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்கள் கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.

* இன்றைய காலத்தில் திருமணமான ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும். தண்டுக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

* புற்றுநோய்களில் வயிறு மற்றும் ஈரல் புற்றுநோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த புற்று நோய் வயிறு மற்றும் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. தண்டுக் கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் கல்லீரலில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.

* தற்காலத்தில் பலருக்கும் பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு பிரச்சனையாக மூலம் நோய் இருக்கிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிது தண்டுக் கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் வெகு விரைவில் குணமாகும்.

* நாம் எத்தகைய நோய்களின் தாக்கத்திற்கும் ஆளாகாமல் இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில்
தண்டுக்கீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்னைகளையும் சுலபத்தில் தண்டுக் கீரை தீர்க்கிறது.

* உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வயது கூடிக்கொண்டு செல்லும்போது குறைந்து கொண்டே வரும். தண்டுக்கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து, நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்து கிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்றுநோய்கள் அணுகாமல் காக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் வெப்பம் தணிக்கும் மணத்தக்காளி! (மருத்துவம்)
Next post பொக்ரான் இந்தியாவின் பெருமிதம்!! (வீடியோ)