கனவுப் பசி! (மருத்துவம்)
பள்ளியில் படிக்கு சிறு வயதில், ‘நீ வளர்ந்து பெரியவனான பின் என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்டால். டாக்டர், இன்ஜினியர் ஆகவேண்டும். பைலட் ஆகி, விமானம் ஓட்ட வேண்டும். நாசாவில் வேலை செய்ய வேண்டும். ஓவியனாக வேண்டும் கிராபிக் டிசைனராக வேண்டும். பெரிய நடிகனாக வேண்டும் என்றெல்லாம் அந்த பிஞ்சு மனதில் விதவிதமான கனவுகளும் இலட்சியங்களும் பிறக்கின்றன. ஆனால் வளர்ந்து பெரியவனானபின் தனியர் கம்பெனியிலோ அல்லது அரசு அலுவலகத்திலோ கிளார்க்காக வாழ்க்கை வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
ஆனால் மனதின் அடி ஆழத்தில் ‘கனவுப் பசி’ இன்னும் இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே மிகவும் போராடி கனவை நிறைவேற்றுகின்றனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் கனவை தொலைத்து வாழ்கின்றனர், ஒரு சிலர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணித்து அவர்கள் வாழ்கையையும் சீரழிக்கின்றனர். கனவு பசியை தீர்க்காததால் வாழ்க்கையை அர்த்தமற்றதாக நினைக்கின்றனர்.
இன்னொரு பிறவி இருக்கிறதா இல்லையா என்பது முற்றும் துறந்தமுனிவர்களுக்கே புரியாத புதிர் தான். அப்படியிருக்க நம் கனவுகளை நாம் ஏன்? ஒரு சிலருக்கு கனவில் தோல்வி கிடைத்தாலும் கூட அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகவே கருதுகின்றனர். கனவுப்பசி வாழ்க்கைக்கு நல்ல தீனிபோடுவதுடன் வாழ்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிவிடுகிறது.
Average Rating