கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையை நீங்களே வடிவமைக்கலாம்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 58 Second

கருவில் இருக்கும் குழந்தைக்கு நாம் பேசுவது புரியும். அதனால்தான் அந்த சமயத்தில் அம்மாக்களை நல்ல விஷயங்களை கேட்கவும், மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். இது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும் கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையின் இயக்கத்தை தூண்டிவிடவும், கற்றுக்கொடுத்தலின் முக்கியத்துவத்தையும், அவர்களின் மூளை வளர்ச்சிக்காக என்ன உணவினை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்குகிறார் மகப்பேறு மற்றும் குழந்தை மேம்பாட்டு ஆலோசகரான அட்சரா வெங்கட்ராமன். இவர் பெங்களூரில் Bump2Cradle என்ற பெயரில் ஆலோசனை கிளினிக் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி முதலில் மூளை மற்றும் முதுகுத்தண்டிலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு பெண் தான் கருவுற்று இருக்கிறார் என்பதை உணர்வதற்கு முன்பே கருவின் மூளை வளர்ச்சி ஆரம்பமாகிவிடுகிறது. அது கருவில் வளர்ச்சியடையும் போதே அதன் திறனை தூண்ட வேண்டும். அது பெரும்பாலான தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அஞ்ச வேண்டாம். காரணம் இது ஒரு வகையான விளையாட்டு முறைதான் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த குழந்தையும் பிறக்கும் போதே நல்ல திறமையானவர்கள் தான். ஆனால் அவர்களை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும். அதனால் தான் பெற்றோர்கள் சிறந்த பள்ளியிலும், நடனம், கராத்தே, செஸ் என பலவிதமான கலைகளில் தங்களின் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் எல்லா குழந்தைகளாலும் எல்லாவற்றையும் திறமையாக கையாள முடிவதில்லை. காரணம் விஞ்ஞான ஆராய்ச்சியின் படி 80% மூளை வளர்ச்சி குழந்தை தாயின் கருப்பையில் இருக்கும் போதே நடந்து முடிந்து விடுகிறது. மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர உடல் உறுப்புகளின் வளர்ச்சிகளும், அறிவார்ந்த வளர்ச்சிகளும், உணர்வு பூர்வமான வளர்ச்சிகளும், ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சிகளும் தாயின் கருவிலேயே நடைபெறுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பொறுத்தவரையில், 80% கருவிலும், 15% 0-5 வயதுக்குள்ளும், 5% 5 வயதிலிருந்து ஆயுள் முழுவதும் ஏற்படுகிறது.

குழந்தை 5 வயதானதும், அவர்கள் பள்ளிக்கு செல்ல தயாராகிவிடுவார்கள். அந்த சமயத்தில் இருந்து தான் நாம் அவர்களை பலவிதமான பயிற்சிகளுக்கு உட்படுத்த ஆரம்பிப்போம். நாம் 5% மூளை வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம். ஆனால் அவர்கள் கருவில் இருக்கும் காலம் மற்றும் அவர்களின் ஐந்து வயதிற்குள் ஏற்படும் மூளை வளர்ச்சியினை புறக்கணித்துவிடுகிறோம். ஒரு தாயால் மட்டும் தான், தனது சிந்தனை மற்றும் உணர்ச்சிகள் மூலம் தனக்குள் வளரும் குழந்தையை உருவாக்க முடியும். கருவில் விதை விதைக்கப்படும் போதே மாற்றங்களை செய்துவிட முடியும். மரமாக வளர்ந்த பின்னர் அவை இயலாத காரியம்.

ஐந்து புலன்களின் தூண்டுதல்

கேட்டல், தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல் இவை ஐந்து புலன்களும் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக செயல்பட்டால் அதன் வேகம் அபரீதமானது. இந்த புலன்களின் வளர்ச்சி கருப்பை காலத்திலேயே (Intra uterine) ஆரம்பித்து விடுகிறது. இவற்றை கர்ப்ப காலத்திலேயே பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தூண்டிவிடுவது மிகவும் அவசியம். பொதுவாக பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் முறையினால் நமது இடது பக்க மூளை தான் அதிகம் செயல்படுகிறது. ஆனால் இந்த போட்டி நிறைந்த உலகத்தில் இடது பக்க மூளையின் திறன் மட்டுமே போதாது. வலது பக்க மூளையும் சேர்ந்து செயல்பட வேண்டும். இரண்டு பக்க மூளையும் முழுமையாக சமநிலையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை குறித்து கிளினிக்கில் தாய்மார்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

மூளை தூண்டுதல் பயிற்சியில் சித்திரங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், புதிர்களை விடுவித்தல், எளிய கணக்குகளை போடுதல் போன்றவைகளில் ஈடுபடுத்துகிறோம். இதனால் சிந்தனை மற்றும் கிரியேட்டிவிட்டி இரண்டும் சேர்ந்து செயல்படும். விஞ்ஞான ஆராய்ச்சியில் ஒரு குழந்தையால் ஆறு முதல் பத்து பாஷைகளை கற்கமுடியும் என்பதால் நாங்கள் மொழி வளர்ச்சிக்கான நுட்பங்களையும் கற்றுத்தருகிறோம்.

கருவுற்றிருக்கும் காலத்தில் இசை சிகிச்சை மிகவும் முக்கியமானதாகும். எனவே நாங்கள் அதிலும் கவனம் செலுத்துகிறோம். அதற்காக ஆரவாரம் மிகுந்த இசையை தவிர்த்து மனதை லேசாக்கும் இனிமையான, தெய்வீகமான இசையினை கேட்க வலியுறுத்துகிறோம். காரணம் மிதமான இசைக்கருவிகளைக் கொண்ட இசையினை கேட்கும் தாய்மார்களின் குழந்தைகள் அமைதியாகவும் நன்றாக உறங்க செய்யும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஆரவாரம் மிகுந்த இசையை கேட்கும் குழந்தைகள் இயற்கைக்கு மீறிய சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

கருவின் மூளை வளர்ச்சிக்கான உணவுகள்

குழந்தையின் மூளை வளர்ச்சி, கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சாப்பிடும் உணவினைப் பொறுத்ததும் கூட. தாய் சாப்பிடும் உணவிலிருந்து கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஃபோலிக் ஆசிட், கால்சியம், ஒமேகா-3 கொழுப்புச்சத்து நிறைந்த மீன், வால்நட், ஆளிவிதை, ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.இரும்புச்சத்து கீரை வகைகள், பச்சை காய்கறி கள், உலர் பழங்கள் மற்றும் முழு தானியங்களில் நிறைந்துள்ளது. இவ்வாறு முறையான பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமான குழந்தையாக இருக்கும். மேலும் மற்றவர்களிடம் சகஜமாகப் பழகவும் அனைத்து விஷயங்களையும் விரைவாக கிரகித்துக்கொள்ளும் குழந்தையாக வளர்வார்கள்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்வதால் எந்த பாதிப்போ அல்லது சிரமமோ ஏற்படாது. தினம் பத்து நிமிடங்கள் இதற்காக செல்வழிப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்குள் இருக்கும் அறிவாற்றலை மேம்படுத்த முடியும். இதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகும். இவை எல்லாவற்றையும் விட எதிர்மறை சிந்தனைகள் கொண்டவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.

ஒன்பது மாதம் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டக்கூடிய புத்தகம் படித்தல், எளிய உடற் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், தியானம் செய்தல், நன்றாக ஓய்வெடுத்தல் மற்றும் உங்கள் மனதிற்கு சந்தோஷம் தருகின்ற விஷயங்கள் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். அதுவே சுகப்பிரசவம் ஏற்படவும் வழிவகுக்கும் என்று ஆலோசனை வழங்கினார் மகப்பேறு மற்றும் குழந்தை மேம்பாட்டு ஆலோசகரான அட்சரா வெங்கட்ராமன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!! (மருத்துவம்)
Next post கர்ப்பகால நீரிழிவு நோயும் தீர்வுகளும்!!(மருத்துவம்)