பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.
Read Time:58 Second
யாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறாப்பொறுக்கிப் பேரூந்துத் தரிப்பிடத்தில் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இவ்விரு இளைஞர்களையும் கைது செய்தனர். இவர்கள் உடனடியாக இராணுவத்தினரால் பலாலி படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பகுதியில் கிளைமோர் ஒன்றையும் கண்டெடுத்ததாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.