
முத்து ஆபரணங்களை பாதுகாப்பது எப்படி? (மகளிர் பக்கம்)
*காற்றோட்டமான பாதுகாப்பான இடத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்ட நகைகளை வைக்க வேண்டும்.
*சூரிய ஒளி, வெப்பம் இவற்றுக்கு அருகே முத்துக்களின் அணிகலன்கள் இருக்கக் கூடாது.
*ஸ்ப்ரே, பெர்ஃப்யூம் உபயோகித்தால் முத்து நகைகள் ஒளி இழக்கச் செய்யும்.
*ஒவ்வொரு முறை அணிந்துவிட்டு எடுத்து வைக்கும் போதும் மென்மையாக பட்டுத் துணியால் துடைத்து வைக்க வேண்டும்.
*பட்டு நூலில் கோர்த்த முத்து மாலைகளில் ஆண்டிற்கு ஒரு முறை பட்டு நூலை மாற்ற வேண்டும். உள்ளே உள்ள பட்டு நூல் நைத்து அறுந்து போவது நமக்குத் தெரியாது. இதனால் விலை உயர்ந்த முத்துக்களை நாம் இழக்க நேரிடும்.
*முத்துக்களை வாங்குவதற்கு முன் இயற்கை வெளிச்சத்தில் வைத்து பார்த்து வாங்க வேண்டும்.
*முத்துக்கள் அடங்கிய மாலையை மற்ற அணிகலன்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது.
*துடைக்கும் போது முத்துக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*முத்துக்களை தங்கத்தில் பதிந்து நகை செய்தால் முத்து தங்கத்தில் கரைந்து விடும். வெந்நீரில் கழுவவும் கூடாது.