குழந்தையின் கண்களை பாதுகாப்போம்!! (மருத்துவம்)
ஆரோக்கியமான கண்களும் கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு வயதிலே பல குழந்தைகள் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு பல காரணங்களை கூறலாம்.
குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பதில் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் நிபுணர்கள். கண் நிபுணர்கள் குழந்தை பிறந்த ஆறு மாதத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார். உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை தேய்த்து கொண்டு இருந்தால் கண்களில் தூசி அல்லது மணல் இருக்கக்கூடும். அவ்வாறு மணல் அல்லது தூசி இருக்கும் பட்சத்தில் கண்களை தேய்த்தால் கண்களுக்கு தான் பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதனால் தாமதிக்காமல் கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். கண்களில் கண்ணீர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கண் நிபுணர்களை பார்த்து பரிசோதிப்பது அவசியம். உங்கள் குழந்தைகள் தொலைகாட்சி, கணினி, வீடியோ கேம் முன்பு மிக அருகில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் குழந்தையின் கண் பராமரிப்பை கருத்தில் கொண்டு குழந்தைகளிடம் மிக அருகாமையில் அமர்வதால் கண்களின் நரம்புக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரியபடுத்துங்கள்.
கணினி மற்றும் வீடியோ முன்பு நீண்ட நேரம் அமர்வதால் கிட்டபார்வை அறிகுறிகள் தோன்றும் என குழந்தைகள் கண் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜங்க் உணவுகள், குளிர்பானங்களை சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கம் இருந்தால் மட்டுமே குழந்தைகளை கண் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கு சிவப்பு மற்றும் பச்சை நிற காய்கறிகளை உள்ளடக்கிய சரிவிகித உணவுகளை வழங்கவேண்டும்.
பச்சை காய்கறிகளான கீரை, கேரட், பீட்ரூட், மஞ்சள் நிறம் கொண்ட பழங்கள், மாம்பழம், பப்பாளி போன்றவற்றில் கரோட்டின் கொண்டுள்ளது (வைட்டமின் ஏ முன்னோடியாக உள்ளது) எனவே பச்சை காய்கறிகள் குழந்தைகளின் கண்களை பாதுகாத்துக்கொள்ளும். சரியான லைட் வெளிச்சத்தில் குழந்தைகளை வாசிக்கவோ, படிக்கவோ செய்ய அனுமதிக்க வேண்டும்.
வாசிப்பு பொருள் மற்றும் குழந்தையின் கண்களுக்கிடையே பன்னிரண்டு பதினான்கு அங்குல இடைவெளி இருக்க வேண்டும் இது குழந்தையின் கண் பாதுகாப்புக்கு மிக அவசியம். கால்பந்து, கிரிக்கெட், டோர் கேம்ஸ், போன்ற விளையாட்டுகளை விளையாட விரும்பும் குழந்தைகளுக்காக கண்களை பாதுகாக்கும் விதமாக பாலிகார்பனேட் கொண்டு செய்யபட்ட கண்ணாடியை குழந்தைகளுக்கு அணிவிக்க செய்வதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.. குழந்தைகளுக்கு கண்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...