காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
கிண்ணியா மஹ்ரூப் நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுமி சுமையா பானு மஹமட்லாபீர் (9வயது) புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை இந்த சிறுமி திடீரென காணாமற் போகவே பெற்றோர் தேடுதல் நடத்தினர். பின்னர் காவல்துறையினரிடம் முறையிட்டதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒரு சிலரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான மஹம்மட் அலி நஸீர் (22) என்பவரின் வாக்கு மூலத்தையடத்தே இந்தச் சிறுமியின் சடலம் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது. இந்த சிறுமி கொலை செய்யப்பட்;டு பாழடைந்த கிணறொன்றினுள் போடப்பட்ட பின்னர் புதைக்கப்பட்டு இருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இவர் புதைக்கப்பட்ட இடத்தில் வாழைமரம் நடப்பட்டு புதைகுழி மறைக்கப்பட்டுள்ளது. இ.ந்தக் கொலை தொடர்பாக சீனன்குடா காவல்நிலைய உதவி அத்தியஸ்தகர் சிசிர வீரக்கோன் தலைமையிலான காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரான நஸீர் முன்னர் பல்வேறு குற்றச்செயல்;களில் ஈடுபட்டவரென ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக எற்கனவே மகாலிங்கம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.