குழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 24 Second

தேவைப்படும் பொருட்கள்:
கற்பூரவல்லிதழை 10 இலைகள்
தேன் தேவைப்படும் அளவு
வெற்றிலை ஒன்று
மிளகு 5முதல் 10 வரை
துளசி 10 இலைகள்
நெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை:கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு நரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும். அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். குழந்தையும் சுகமாகும். மிக எளிதில் கிடைக்கும் மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பக்க விளை வில்லா மருந்தை வழங்கி சளித் தொல்லையை போக்குவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உரம் விழுதல் சில உண்மைகள்!! (மருத்துவம்)