ஜலதோஷத்தை நீக்கும் முசுமுசுக்கை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 56 Second

*முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளையும் போக்கவல்லது.

*இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெரு மரங்களைச் சுற்றி இதனை காணலாம்.

*இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்மிக்கவை. இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காய வைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத்தூளுடன் 80 கிராம் அளவு முசுமுசுக்கைக் கீரையை ஒன்றாக கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 1/2 தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

*சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நீக்கவல்லது. காசநோயால் அவதியுறுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதைத்தொடர்ந்து சாப்பிட்டுவர நோய் குணமாகும்.

*இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக்கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக்கூடியது.

*முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெயாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

*கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை தலை முழுக வேண்டும்.

*வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு ஒரு டம்ளர் நீரில் அந்த பொடியினை 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

*முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். 3 பிடி இலைகளை 1/4 கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும். இதையே துவையலாகவும் செய்து சாப்பிடலாம். இரைப்பிருமல், மூக்குப்புண் போன்றவை குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
Next post உறவுக்கு பின் மனைவியிடம் இதை செய்ய வற்புறுத்துபவரா? இதைக்கட்டாயம் பாருங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)