மூட்டு வலி தீர்வு தரும் ஆயுர்வேதம்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 16 Second

நாற்பது வயதைக்கடந்துவிட்டாலே, பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை மூட்டுவலி ஆகும். மூட்டு என்பது இரண்டு எலும்புகளை இணைக்கும் பகுதி. நாம் சிரமமின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு உதவுவது இந்த மூட்டுகளே. இந்த மூட்டுகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது, அதில் வலி உண்டாகிறது. மருத்துவ ஆய்வுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களே இந்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள் என்கிறது. அந்தவகையில், நீண்டகாலமாக மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவிளைவுகள் எதுவும் இன்றி நிரந்தரத் தீர்வளிக்கிகும் ஆயுர்வேத மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வயதாகும்போது உடலில் உண்டாகும் மாற்றங்களால் பல்வேறு பிரச்னைகள் தோன்றுகின்றன. அந்தவகையில், மூட்டுவலியும் ஒன்று. ஏனென்றால், வயதாகும் போது மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு மெதுவாக இயங்க தொடங்குகின்றன. இதற்கு குருத்தெலும்பு திசுக்களின் தேய்மானம் மற்றும் அழிவும் காரணமாகும். மேலும், வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவைகளும் மூட்டுவலி உண்டாக மற்றொரு காரணங்களாகும்.

அதுபோன்று, நமது உடலில் முட்டியைச் சூழ்ந்து இருக்கும் காட்ரிலேஜ் என்ற வழவழப்பான பொருள்தான் மூட்டுகள் இயல்பாக தன் பணிகளைச் செய்ய உதவுகிறது. இந்தக் காட்ரிலேஜ், ஏதாவது காரணத்தால் பாதிக்கப்பட்டு, தசைகள் வலுவிழக்கும்போதும் மூட்டுவலி ஏற்படுகிறது. இது ஓய்வாக இருக்கும் நேரத்தை காட்டிலும், ஏதாவது வேலை செய்யும்போது, மூட்டுவலியை அதிகம் உணருவார்கள். அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது, வலி குறைவது போல இருந்தாலும், மீண்டும் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு இதே பிரச்னை வரும். இது காட்ரிலேஜ் தேய்வதால் உண்டாகும் மூட்டுவலியாகும். இதற்கு `ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’ என்று பெயர்.

இதை ஆரம்ப நாட் களிலேயே கண்டறிந்துவிட்டால் பிசியோதெரப்பி, உடற்பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், ‘ஆஸ்டியோமைலிடிஸ்’ (Osteomyelitis) எனப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்களே சில சமயங்களில் மூட்டுகளைத் தாக்கத் தொடங்கும்.

இதனால் பாதிக்கப்படும்போது எங்கெல்லாம் எலும்புகள் இணைகின்றனவோ அங்கெல்லாம் வலி உண்டாகும். கைகள், கால்கள், கை விரல்கள், கால் விரல்கள் எனப் பாரபட்சம் பார்க்காமல் எல்லா இடங்களிலும் வலி உண்டாகும். சில சமயம் வீக்கமும் உண்டாகலாம். இந்த வகை மூட்டுவலியை ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடிக்கடி காய்ச்சல் வரும், உடல் எடை குறையும், எழுந்து நடப்பதற்கே சிரமத்தை உண்டாக்கிவிடும். இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்ற நிலைமை வரை தள்ளிவிடும்.

`பர்சைட்டிஸ்’ (Bursitis) எனப்படும் மூட்டுவலி, பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்கு வரக்கூடியது. இது மூட்டுகள் அதிகமாக ஒன்றோடொன்று உராய்ந்து (அதிக உழைப்பால் சோர்வாகி) வலியை உண்டாக்குவது. பணியிடங்களில் ஒழுங்கான முறையில் அமராமல் இருப்பவர்களுக்கும் இந்த வகை வலி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மேலும், ரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகமானாலும்கூட மூட்டுவலி ஏற்படலாம். இதற்கு உடல் எடை அதிகரிப்பது காரணமாக அமைகிறது.

மூட்டுவலிக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறைகள்

மூட்டுவலிக்கு தீர்வளிக்கும் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை முறையில் மூலிகைகள், தியானம் மற்றும் யோகா ஆகியவை பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகள் பெரும்பாலும் குணமடைவதாகக் கூறப்படுகிறது. மூட்டுவலிக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல பலனளிக்கும் சிகிச்சையாகவும் பார்க்கப்படுகிறது இந்த ஆயுர்வேத மருத்துவம்.
ஓமம், மஞ்சள், அஸ்வகந்தா, குங்கிலியம், இஞ்சி, திரிபலா, குக்குலு மற்றும் சதாவரி போன்ற மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள், மாத்திரைகள் மற்றும் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தும்போது, மூட்டுவலிகளைப் பக்க விளைவுகள் ஏதுமின்றிப்போக்கிட உதவுகிறது.

ஆர்த்தோக்யூர் ஆயிலை 10 மி.லி அளவு கிண்ணத்தில் எடுத்து, மிதமாகச் சூடாக்கி, கிழியைக் (Kizhi) கொண்டு சிறிது சிறிதாகத் தொட்டு, 10-15 நிமிடங்கள் தினமும், வாரம் இருமுறை மசாஜ் செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொடன்சுகாதி தைலம், நாராயணாதி தைலம், கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை மிதமான சூட்டில் தேய்த்துவிடுவதும் சிறந்த பலனளிக்கும்.

பரட்டைக்கீரை, வாதநாராயணன்கீரை, முடக்கத்தான்கீரை மூன்றையும் சமஅளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் மூட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டுவலிகள் குறையும்.கீல்வாத பிரச்சனைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கான மற்றொரு அணுகுமுறை மசாஜ். மூலிகை எண்ணெய்கள் கொண்டு வாரத்திற்கு இரண்டுமுறை மசாஜ் செய்து கொள்வதால், மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் காணலாம். மூட்டுகளின் வீக்கம் இருக்கும் பகுதியில் ஆமணக்கு இலைகளை கட்டி வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

தீர்வு தரும் உணவுமுறைகள்

நாம் உண்ணும் உணவு நம் ஆரோக்கியத்தில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போதுமான பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நார்ச்சத்து, புரோபயாட்டிக் போன்றவை குறைந்து, உடல் பாதிக்கப்பட தொடங்குகிறது. இதன் காரணமாகவும் மூட்டுவலி ஏற்படுகிறது.முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து வேகவைத்து தொடர்ந்து பதினைந்து நாட்களுக்குச் சாப்பிட்டு வர மூட்டுவலி குணமாகும்.

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மூன்று பல்பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும். முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சமஅளவு எடுத்து, ஒரு பல்பூண்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டுவலி குறையும்.

பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா பத்து கிராம் அளவு எடுத்து துவையல் செய்து சாப்பிட மூட்டுவலி, மூட்டுத் தேய்வு, இடுப்புவலி போன்ற பிரச்னைகள் குறையும். மூலிகைத் தேநீர்தொடர்ந்து அருந்திவரும்போது, மூட்டுப் பிரச்னைகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது. ஒரு தேத்கரண்டி கறுப்பு எள்ளை நூறுமில்லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட, மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும்.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூளுடன் தேன்கலந்து குடித்து வர மூட்டுவலி குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாதங்களில் பித்த வெடிப்பு…!! (மருத்துவம்)
Next post மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)