முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்களுள் இருவர் மரணம்
Read Time:1 Minute, 0 Second
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டவர்களில் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நோயாளர்கள் காயமடைந்தவர்கள் மற்றம் அவர்களது உறவினர்களும் உதவியாளர்களும் என 484பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டனர் நேற்றைய பயணத்தின் போது கர்ப்பிணிப் பெண்னொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அதிகாரிகளின் தகவலின்படி இதுவரை கப்பலில் முல்லைத்தீவிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இதுவரை 52 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating