ஜோன் ஹோல்ம்ஸ் வவுனியாவுக்கு சென்றுள்ளார்
Read Time:1 Minute, 6 Second
இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் செட்டிகுளம் நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ், அங்கிருக்கும் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இந்த மக்களின் குறைநிறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜோன் ஹோல்ம்ஸ் உறுதியளித்தார். இதேவேளை, இந்த விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜோன் ஹோல்ம்ஸ், இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Average Rating