காட்டு யானையைக் குறிவைத்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

Read Time:1 Minute, 45 Second

மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகல பிரதேசத்தில் காட்டுயானையை கலைப்பதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்க இலக்காகி இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மரணமடைந்த இராணுவ சிப்பாய் மதவாச்சியை சேர்ந்த 29வயதான கே.சம்பத் தரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தப்பிரதேசத்தில் இராணுவத்தினர் வழமையான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மதம் பிடித்த யானையொன்றை அவதானித்தனர் அதனை கலைப்பதற்காக பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக குறித்த சிப்பாய் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்ததாகவும் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மரண விசாரணையை சடத்திய வாழைச்சேனை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதோடு எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவிருக்கும் மரண விசாரணையின் போது சாட்சியங்களை ஆஜர்படுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் -ஜனாதிபதி
Next post போர் நிறுத்தம் ஒன்றை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -.ஊடக அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு