இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 23ஆயிரத்து 685பேர் வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இந்த மாதத்திற்குள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இதுவரையில் விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இரட்டை வாய்க்கால் சந்தியின் அதிகாரத்தை நேற்று கைப்பற்றிய 58வது படையினர் 700மீற்றர் நீளமுடைய புலிகளின் மற்றுமொரு பாதுகாப்பு அணையையும் நேற்று கைப்பற்றியுள்ளனர். இரட்டை வாய்க்கால் சந்தியிலிருந்து தெற்குப் பகுதியில் முன்னேறிச் சென்றே இந்த பாதுகாப்பரணை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
One thought on “இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை”
Leave a Reply
You must be logged in to post a comment.
Why don’t you as a media ask a question to Srilankan government that they said few months ago there are only 70,000 people living in thet area and sent food and medical supplies based on that? You won’t as you are getting money from the government. Don’t be selfish, it’s our people, OUR PEOPLE not others.