வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது
Read Time:56 Second
வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 20 சிறுமிகளும், 18 சிறுவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருப்பதுடன், இவர்கள் 18 வயதிற்கு குறைந்தவர்களெனவும் தெரிய வருகிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவே இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Average Rating