ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை

Read Time:2 Minute, 1 Second

jaya-karunanidhi200சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். ஆனால் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மறுத்துள்ளார். இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களை விட மிகவும் நன்றாக உள்ளன என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். எனவே ஜெயலலிதா சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான தேசப்பற்று மிகுந்த கொள்கைகளுக்கு அவர் மீண்டும் திரும்ப வேண்டும். இப்படி அவர் செய்தால் அவருடைய புகழ் மேலும் கூடுமே தவிர குறையாது. தன்னை சுற்றியுள்ள புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு அவர் அரசியலில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றார் சுப்பிரமணியசாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை

  1. வேஷத்தின் தூஷனக் குரலான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 1997 ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் ஜெயலலிதாவை வேசி, குண்டம்மா என்றெல்லாம் திட்டி தீர்த்ததை எப்படி மறக்க முடிந்தது?

  2. ஐயோ ஐயோ…ரொம்ப காமடி…
    இவ வந்தா உடனே தமிழ் ஈழம் கிடைத்து விடுமோ?
    தமிழ் நாடு தமிழர் தான் முட்டாள்கள் எண்டால் நாமுமா?
    இப்பவே… எங்கள் தலைவி… தமிழ் ஈழத்தின் தலைவி.. உங்கள் வாக்கு அவவுக்கே,….
    எண்டெல்லாம் கோசம் போட தொடங்கி விட்டினம்….

    அது சரி, மத்தவன் தேன் ஒழுக பேசும் போது அதன் உண்மை தன்மையை அறியாது சுயஇன்பம் காணும் கூட்டம் தானே நாங்கள்……

    வாழ்க ஜெயலலிதா…. வாழ்க புரட்சி தலைவி…. வெல்க தமிழ் ஈழம்…
    ஹிஹி……

    அதுசரி… அம்மா புலிகளை எதிர்ப்பதாகவும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பதாகவும் சொன்னா. அப்ப தமிழ் ஈழம் எடுத்து யார் கையில் கொடுக்க போறா? எனக்கு டைம் இல்லை…ரொம்ப சாரி…..

    அம்மாவின் தேர்தல் பேச்சும், அதை நம்பும் தமிழரும் ஒண்டு நினைக்க வேண்டும்…. சிங்களவன் மாங்கா மடையன் இல்லை நம்மை போல..

  3. எங்கட தமிழ் சனத்தை நினைச்சா ரொம்பப் பரிதாபமாக் கிடக்கு…
    தமிழீழத்தைப் போராடி வெல்வோம் எண்டு சொன்ன பிரபாகரன் இப்ப பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். எங்கட புலம்பெயர் தமிழரும் எத்தனையோ உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, கோஷங்கள் எண்டு தடல்புடல் காட்டிச்சினம்… எல்லாம் புஸ்வாணமாப் போச்சு! ஆம்பிளைப் புலி பிரபாவாலையும் ஒண்டும் செய்யேலாது எண்டும் நல்லா விளங்கிப்போச்சு. இப்ப என்னடான்னா!
    நம்ம பேய்ச் சனம் இப்ப பொம்பிளைப் புலி ஜெயலலிதாவை நம்பிக் காத்திருக்குதுகள். போற போக்கைப் பார்த்தால்… “அவர் லீடர் ஜெயலலிதா! வீ வோன்ற் ரமிலீலம்” எண்டு அடுத்த கோவண ஈர்ப்புப் போராட்டத்தில கத்துவாங்கள்போலக் கிடக்கு!
    (ஜெயலலிதா தமிழீழம் எடுத்துத் தாறதெண்டா… பிறகெதுக்குப் பிரபாகரன் சும்மா வன்னிச் சனத்தை வதைச்சுக் கொண்டிருக்கிறான்… சரணடையாமல் சைனைற் அடிச்சுச் சாகலாமே!)
    அடே தமிழா! ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்கிறது எண்டு வீர வசனம் பேசினியே! இப்ப ஒரு கன்னடத்துக்காரியை தமிழீழம் எடுத்துத்தர வந்த தெய்வம் எண்டு சொல்லுறியே… வெட்கமில்லையா? இதைவிட… ஒரே நாட்டில பிறந்த சிங்களச் சகோதரருக்கு சூ .. .. க்கொடுத்து பிழைக்கலாம்!

Leave a Reply

Previous post வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்!
Next post உடையார்கட்டு தேடுதலில் பெருந்தொகை ஆயுதம் மீட்பு