சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கி விட்ட புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வது பயனற்றது -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Read Time:1 Minute, 2 Second

இலங்கைப்போர் ஒருமுடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தை செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார். எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில் ஒருஇறுதி நடவடிக்கையாகவே விடுதலைப்புலிகள் மீது அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பேசுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் முந்தைய சமரச முயற்சிகளை விடுதலைப்புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

10 thoughts on “சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கி விட்ட புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வது பயனற்றது -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  1. அரசியலை அரசியலாலேயே சந்தித்து சவால்விட்டு வெற்றிகரமாக கொண்டு செல்வதே அரசியலாகும். அப்பாவிமக்களை பலிகொடுத்து குறுக்கு வழியால் அரசியலை நாடநினைப்பதுவும் தூண்டிவிட எண்னுவதும் அரசியல் அல்ல மாறாக பயங்கரவாதமே!
    ஒரு அரசியல் விபரீதமாக மாறும் பொழுது பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் அரசியல் தலைவர்களே ஒழிய அந்தநாட்டின் அப்பாவிமக்கள் அல்ல.கடந்துவந்த துன்பமான வரலாற்றுக்கு சிங்களத் தலைமைகளுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதேயளவு பங்கு தமிழ்அரசியல் தலைமைகளுக்கும் உண்டு.
    உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதோ ஒரு காரணத்தால் குடியேறி அந்த நாடுகளின் பாஷைகளையும் கலாச்சாரங்களையும் சட்ட திட்டங்களையும் கற்று தேர்ந்து பழகிவிட்ட தமிழனுக்கு ஒட்டுண்ணி வாழ்கை நடத்தாது பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்கிற சுயநலமற்ற இனம் இலங்கையிலுள்ள சிங்கள இனமே அந்த இனத்திடம் கூட்டுவாழ்கை வாழமுடியவில்லை என்றால் அது அந்த இனத்தின் குறைபாடாக இருக்க வேண்டிதில்லை. எம்மினத்தின் குறைபாடாகவும் இருக்கலாம்

  2. இந்தியாவை வென்றதாக சொல்வார்கள், துரோகிகள் என்பார்கள், தொப்புள் கொடி உறவு என்பார்கள், எம்மை அழிக்கப் போகிறது என்பார்கள், இராணுவ உதவிகளை செய்கிறது என்பார்கள், எம்மை காப்பாற்ற வேண்டுமென்பார்கள், இந்திய படங்களுக்கு – தொலைக் காட்சிகளுக்கு தடை என்பார்கள். இந்திய கலைஞர்களை உதவிக்கு கால் பிடிப்பார்கள். இப்படி ஒரு கொள்கையே இல்லாத சுயநல அமைப்பு என்றால் அது புலிகள்தான்.

  3. pirapakaran is 100% terrorist.
    அவரது தலைமையினை விரும்பியோ விரும்பாமலோ சிலர் நம்பிவிட்டனர்.
    பலரும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டனர்.
    இந்தப் பயங்கரவாதியின் பெயரால் வாழ்க்கை நடத்துபவர்களும், ச்முதாயத்தில் சில அந்தஸ்து பெற்றவர்களும் இன்று கத்துகிறார்கள். பாவம்….
    ltte யினது கணிப்பில், எவர் பயங்கரவாதி இல்லை? வெளிநாடு சென்ற மக்களூம் முன்னர் அதே பெயரால் அழைக்கப் பட்டனர்.சர்வதேச பிச்சைக்காரர்; ம்ம்ம் இந்தப் பிச்சைக்காரரிடம் பிச்சை எடுத்த புலிகள்? அந்தப் புலிகளுக்கு கொடி பிடிக்கும் முதுகெலும்பில்லாத ……we want thamil eelam, our leader pirapaakaran……….சீ சீ கேவலம்…..

    தமிழ் மக்களுக்கு தீர்வோ தீனியோ, அது இந்த பிரபாகரன் செத்தாப் பிறகுதான் …என்னவெண்டாலும்…
    but, அவனை உயிரோட பிடிச்சு அவன் செய்த பாவமெல்லாத்தையும் அவன்ர வாயால் இந்த உலகத்துக்கு சொல்ல வைக்கவேணும்…அப்பதான் இந்த மொக்கு, மோட்டு, ஜடங்கள் திருந்துங்கள்..

    எங்கட library யிலையே எத்தினை இந்தியப் புத்தகங்கள எடுத்துப் போனவங்கள்? தடை செய்தவங்கள்…..இப்ப india இலிருந்து வாய்க்கரிசி கேக்கிறான் போல….

    thambia saburatnam, all sinhala people are not bad…ok? any one can live with sinhaleese…best example peace full colombo, kandi, etc etc etc…
    but try to think about your home town…..how may variaty of people there….
    jaffna, vanni, batti, etc etc etc….
    vadamaraashshi, thenmaraachchi, valikaamam, thiivu…..
    then casts……..mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
    tell me

  4. 1977 ம் ஆண்டு யூலை மாதம் 21ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே த.வி.கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் ஒரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67%மக்களின் ஆதரவு பெறவேண்டியது கட்டாயமானதென்பதே சர்வதேச நியதியாகும்.

  5. சில தமிழ் சினிமாக்களில் வரும் கதைகள் போல தம்பையாவிற்கு 1956 – 1977 – 1983 ஆகிய ஆண்டுகளி்ல் நடந்தவை மறந்துவிட்டதுபோலும். சிங்களவன் தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்து துரத்தியடித்தான். இந்த நிகழ்வுகளை தமிழ்ச்சமூகம் என்றைக்கும் மறக்காது மன்னிக்காது. தமிழர்கள் கெட்டவர்களென்றும் சிங்களவன் நல்லவன் என்றும் சான்றிதழ் வழங்கும் தம்பையா சபாரட்ணம் தமிழ் மக்களிடையே முளைத்த ஒரு அரிளிச்செடி இந்த அரிளிச்செடியை சிங்களக் காடையர் கூட்டம்தான் நீர் ஊற்றி வளர்க்கிறது என்பது நல்ல தமிழனாய் இருப்பவன் அறிவான். இப்படிப்பட்ட சில கேவலங்கள் சிங்களவனுடன் கூட்டுச்சேர்ந்திருப்பதால் தான் அன்று தொட்டு தமிழன் தலை நிமிர முடியாமல் தவிக்கின்றான்.

  6. iya sabaratnam.why are you wasting your time here with these scammers,these guys got paid by srilankan government to have a web site here,so dont bother this guys,if you keep arguing with these low life scams,these people will come more popular

  7. புலிகளின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை எடுத்துப்பார்க்கையில் வன்னியில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு விடுதலை போராட்டம் என்பது அடிப்படையில் மக்களுக்கானது. எனவே அது முழுக்க முழுக்க மக்களை சார்ந்தே நிற்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் அகங்கார அதிகார நலன்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகிறது. புலிகள் தமது கேள்விக்கிடமற்ற அதிகார அகங்கார நலன்களையே சுயநிர்ணய உரிமை என்கிறார்கள். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் பட்டுத் துப்பட்டாவினால் புலிகள் தமது குரூர சொரூபத்தை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
    தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
    மக்கள்மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள்மீது அடக்குமுறை செலுத்தும் புலிகள், ஆயுதங்கள்மீது மட்டுமே தமது முழு நம்பிக்கையையும் வைத்து வந்துள்ளனர். மேலும் ஒரு விடுதலை போராட்டத்தின் வெற்றி என்பது தனது பிரதான எதிரி யார்; என்பதை இனம்காண்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் புலிகள் சாதாரண தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களை எதிரியாக தீர்மானித்து, அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த மக்களை மட்டுமல்லாது, நீதியை விரும்பும் அனைத்து மக்கள் உட்பட, சகல வளங்களையும் திரட்டிப் போராடாமல், ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்பதை உலகின் பல விடுதலைப்போராட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட பல போராளிகள், ஜனநாயகவாதிகள், கல்விமான்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து தமது எதேச்சாதிகார ஏகத்தலைமையை மக்கள்மீது திணித்துள்ளனர்
    புலிகள் தாம் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போரிடும் ஒரு இயக்கம் என்று தம்மை சொல்லிக்கொண்டாலும், உண்மையில் புலிகள் அவ்வாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கமானது எல்லா இன மக்கள் மீது கொள்ளவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக, புலிகள் சாதாரண சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக கொலைவெறி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். சிங்கள மக்களின் கிராமங்கள், புத்தகோவில்கள், பஸ்கள், புகைவண்டிகள், சந்தைகள், பஸ்நிலையங்கள், அரசகாரியாலயங்கள் என சகல இடங்களிலும் புலிகள் சிங்கள மக்களை தாக்கியும் கொலைசெய்தும் வருகின்றனர். அதேபோல, சிறுபான்மையினரான, முஸ்லீம் மக்கள் மீதும், தொடர்ச்சியாக தாக்குதல்களை நடாத்தி, புலிகள் அவர்களை படுகொலைசெய்து வருகின்றனர். 1990ல் வடக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லீம் மக்களை ஒரு சில மணித்தியாலயங்களில் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்ததுடன், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புகுந்து தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நுர்ற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டும் கொன்றனர். அத்துடன், தொடர்ச்சியாக முஸ்லீம் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொலைசெய்வதுடன், அவர்களது சொத்துக்களையும் அபகரித்தும், அழித்தும் வருகின்றனர். சிங்கள மக்கள் மீதும், முஸ்லீம் மக்கள் மீதும் புலிகள் மேற்கொள்ளும் இத்தாக்குதல்கள் அப்பட்டமான தமிழ் இனவெறி செயல்பாடுகளேயன்றி வேறொன்றுமல்ல.
    அதேநேரத்தில், புலிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான பல்வேறு விடுதலை இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பனவற்றை அழித்தும், அவற்றின் உறுப்பினர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் வந்துள்ளனர். அத்துடன் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், மனித உரிமைவாதிகள், அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களையும் நூற்றுக்கணக்கில் கொன்றொழித்துள்ளனர். வடக்கு – கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளான – பேச்சு, எழுத்து, கூட்டம் கூடுதல், சுதந்திர நடமாட்டம் போன்ற அனைத்தையும் முற்றுமுழுதாக புலிகள் தடைசெய்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, புலிகள் ஒருபோதும் ஒரு விடுதலை இயக்கமாக இருக்கமுடியாது. உண்மையில் அது, அடிப்படையில் ஒரு தமிழ் இனவாத இயக்கமாகும்.
    மறுபக்கத்தில், புலிகள் தனிநாட்டுக்கான போராட்டம் என்ற போர்வையில் நடாத்தி வருகின்ற அழிவுகரமான யுத்தம், இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை என்பனவற்றுக்கு சவாலாக அமைந்துள்ளதுடன், தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்துவந்த, சாதாரண வாழ்க்கையை கூட சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது. புலிகளின் இந்த யுத்தத்தால், தமிழ்மக்கள் இன்று ஒரு தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து, சொந்த நாட்டிலும், உலகெங்கிலும் ஒர் அகதி கூட்டமாக மாறியுள்ளனர்.
    இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளையும் புலிகள் சீர்குலைத்ததுடன், மீண்டும் மீண்டும் யுத்தப்பாதையையே தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். எமது அயலிலுள்ள நெருங்கிய நட்பு நாடான இந்தியா தலையிட்டு, தமிழ்மக்களுக்கு ஓரளவு நீதியான ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒப்பந்தமொன்றை 1987ல் உருவாக்கியபோதும், பிரேமதாச போன்ற சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகள் அதை முறியடித்ததுடன், இந்தியாவுடன் யுத்தம் ஒன்றிலும் ஈடுபட்டு, அந்நாட்டின் தலைவரான ராஜீவ் காந்தியையும் கொலைசெய்தனர். அதேபோல, சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டபோதும், புலிகள் அதையும் ஏற்க மறுத்துவிட்டனர்
    புலிகளின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், அவர்கள் ஜனநாயக வரம்புகளுக்குள் உள்ளடக்கப்பட முடியாத, ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து நிற்கிறது. புலிகளை ஜனநாயக முறையில் கையாள்வதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விகண்டுவிட்டன. புலிகளது வரம்பற்ற எதேச்சாதிகார போக்கை கட்டுப்படுத்தும் அல்லது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உள்ள, தமிழ் அமைப்புகளோ தனிமனிதர்களோ எவருமே இன்று தமிழ் சமூகத்தில் கிடையாது. அவர்கள் எல்லோரையும் புலிகள் ஏற்கெனவே கொன்றொழித்துவிட்டனர். புலிகள் அமைப்பு என்பது, இன்று சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமின்றி, தமிழர்களுக்கும் பிரச்சினைக்குரிய ஒர் அமைப்பாகிவிட்டது. மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கு தேவையான சரியான அடிப்படைகளை உருவாக்காமல் நடாத்தப்படும் எந்தவொரு போராட்டமும், இறுதியில் தோல்வியைத் தழுவும் என்பதை புலிகளின் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாறு எடுத்துக்காட்டி நிற்கிறது.
    எனவே புலிகளின் பிரச்சினையை முற்றுமுழுதாக தீர்த்து, இலங்கையின் அனைத்து இன மக்களையும் பாதுகாப்பதானால், புலிகளை முற்றுமுழுதாக தோற்கடித்து, அழிப்பதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை. அந்த வகையில், இலங்கை அரசாங்கம் தற்பொழுது புலிகளுக்கு எதிராக வன்னியில் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், தவிர்க்க முடியாதவையும் அவசியமானவையுமாகும். எனவே புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இனப்பிரச்சினை தீர்வுக்கு புலிகளுடன்தான் பேசவேண்டும் என சில தரப்புகள் கோருவது அர்த்தமற்றது.

  8. ANA…with your stupid comments you can go to hell…unfortunately some of anti Tamil terrorist(eddappan) like you living with us…Hon.Pirabaharan is the great TamilKing for whole world Tamils.

  9. தம்பையாவுக்கு புலி்ப்பித்து பிடித்து விட்டது நல்லதொரு வைத்தியசாலையில் கொண்டுபோய் சேருங்கோ எண்டாலும் ஆள் தப்பிறது ரொம்பக் கஷ்டம்.

  10. என்ன சாமானியன்… நல்லதொரு வைத்தியசாலை எனச் சொன்ன நீங்கள்…
    நீங்கள் குளிசை எடுத்த வைத்தியசாலையை சிபார்சு செய்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Previous post ITN News -Sri Lanka Wanni Operation (VIDEO)
Next post அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய இரண்டு கோடி ரூபா பேரம்: ரூபா 10 இலட்சம் முற்பணமும் ஆயுதங்களும் புலிகளினால் கையளிப்பு