புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது
Read Time:57 Second
புலிகள் எனக் கூறி கப்பமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவரை விஷேட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களுடன் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இவர்கள் தங்களை புலிகள் என அறிமுகப்படுத்தி கப்பம்கோரியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது இந்த கும்பல் தொடர்பில் கிடைத்த விஷேட முறைப்பாட்டைத் தொடர்ந்து விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்து இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating