பிரித்தானிய தூதரகத்திற்கு எதிராக பேரினவாதக் குழுக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!
Read Time:1 Minute, 7 Second
அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் சில கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா இலங்கை உள்ளூர் விவகாரங்களில் தலையிடக் கூடாது எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியும் கொடும்பாவி எறித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதேவேளை இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவலம் நிகழ்ந்துக் கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கவலை வெளியிட்டுள்ளார்.
Average Rating