ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்..

Read Time:1 Minute, 28 Second

ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச நேற்று வவுனியா செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்ததுடன், நிவாரண உதவிகள் சிலவற்றையும் வழங்கியுள்ளார். அவருடன் இராணுவத்தளபதியின் மனைவி, ஜனாதிபதி செயலரின் மனைவி, விமானப்படைத் தளபதியின் மனைவி, பொலீஸ் மாஅதிபரின் மனைவி மற்றும் சுகாதார அமைச்சின் செயலர் டொக்டர் சுகந்த லியனகே மற்றும் அவரது மனைவி ஆகியோர் வவுனியா சென்றிருந்தனர். வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார். பின்னர் விசேட ஹெலிகொப்டரில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதிகளுக்கு சென்ற மேற்படி குழுவினர் சிறிலிய சவிய வேலைத் திட்டத்தின்கீழ் நிவாரணக் கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், உடைகள், பெண்களுக்கான உடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘களேபர’ போஸ் – சர்ச்சையில் நீத்து!
Next post தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து