அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் -ஐ.தே.கட்சி தயாசிறி ஜெயசேகர
Read Time:1 Minute, 8 Second
அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களின் தவறுகளை மறந்து புதிய அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தாம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
Average Rating