படையினரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு 3ஆம் திகதி..
Read Time:1 Minute, 11 Second
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக்கொண்ட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான அரசாங்க வைபவமொன்று எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வைபவத்தை சுதந்திரதின வைபவத்திற்குச் சமமாக காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த வைபவத்தில் முப்படைகளின் தளபதியும், இலங்கை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள விருப்பதாகவும் தெரியவருகிறது. இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு இடம்பெறுவதுடன், யுத்தக்களத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெறுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
One thought on “படையினரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு 3ஆம் திகதி..”
Leave a Reply
You must be logged in to post a comment.
வடக்கையும் தெற்கையும் இணைத்த யாழ்தேவி
உங்கள் பழைய யாழ்தேவி பயண அனுபவங்களை மீண்டும் தொடர…
http://www.youtube.com/watch?v=Izh0lX9-FOc