பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி நியுயோர்க்கில் இரண்டாவது நபரும் மரணம்!!
பன்றிக்காய்ச்சல் நோயால் நியுயோர்க் நகரில் இரண்டாவதாக ஒருவர் இறந்துள்ளார் 50வயதுகொண்ட பெண் ஒருவர் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில் இப்பெண்ணின் மரணத்துடன் அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்களின் தொகை 11ஆக உயர்ந்துள்ளது இந்நோய் தொடர்பாக 94பேர் நியுயோர்க் நகரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் 280பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது நியுயோர்க் நகரில் பன்றிக்காய்ச்சல் தொடர்பான அச்சத்தால் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. உலக நாடுகளில் 12,000பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது இதில் அரைவாசிக்கு அதிகமாக அமெரிக்காவில் உள்ளோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை பன்றிக்காய்ச்சலால் 86மரணங்கள் இடம்பெற்றுள்ளன இதில் 75 மெக்ஸிகோவில் இடம்பெற்றுள்ளன.
Average Rating