கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி
வடமாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்க ராஜாகங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணியகத்தின் ஊடாக இந்நிதி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. டென்மார்க் கண்ணிவெடி அகற்றும் குழு, கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளுக்கான சுவிஸ் மன்றம், ஹோலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு (எம்.ஏ.ஜி)ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவுள்ளன. இலங்கையின் வடபகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது. என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர்.மூர்.கூறினார். ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating