விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் -ஜெனரல் சரத்பொன்சேகா!
Read Time:1 Minute, 21 Second
புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டுமென முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமாலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையில் அவர் இதனை எடுத்துக் கூறியுள்ளார். முன்னர் இருந்த இராணுவபலம் தரைப ;பாதுகாப்புக்குப் போதுமானது. ஆனால் இப்போது தரை, கடல், வான் பகுதிகள் யாவும் அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. ஆகவே தற்போதுள்ள படைபலம் போதுமானதல்ல. அரசுப்பகுதியின் பாதுகாப்பு மட்டுமல்ல புலிகளின் பகுதியின் பாதுகாப்பும் இப்போது படைகளின் கையிலேயே சேர்ந்துள்ளது. முழுப்பகுதியினதும் பாதுகாப்பை உறுதிசெய்ய நாட்டின் படைபலம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு போதிய ஆளணி உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating