போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சித்த இரு வியாபாரிகள் கைது!!

Read Time:1 Minute, 47 Second

போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் புடவை வியாபரிகள் இருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த விஜயன் மற்றும் காரைக்குடி புதுச்சந்தை கீழத் தெருவைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டவர்களாவர் இவர்கள் இருவரும் புடவை வியாபாரத்திற்காக அடிக்கடி இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்று வருவது வழக்கமென்றும், நேற்றுக்காலை, திருச்சி விமான நிலையத்திலிருந்து மிகின் லங்கா விமானம் மூலம், கொழும்பிற்கு செல்ல அவர்கள் தயாராகிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் இருவரின் ஆவணங்களை குடியேற்ற அதிகாரி ஆய்வு செய்தபோது, கொழும்பு செல்வதற்கான டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சரியாக இருந்தது. ஆனால், திரும்பி வருவதற்கான டிக்கெட் போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஜயன், ஜெயபால் ஆகிய இருவரையும் விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம்
Next post வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!