புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது
Read Time:1 Minute, 12 Second
புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் வில்பத்துப் பகுதியில் 2002ம் ஆண்டு வேட்டைக்குச் சென்றிருந்தபோது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் இறுதி சண்டையின்போது வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating