வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்
Read Time:1 Minute, 21 Second
வவுனியா ஓமந்தை முன்னரங்க பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் 12.30மணியளவில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிரனைட் ஒன்று வெடித்ததில் வானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அருகில் பயணித்த ஒருவர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் உலாவிய இராணுவத்தினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் அங்கு நிலவுகின்றன. இச்சம்பவம் இன்றுமாலை 5.30க்கு நடைபெற்றுள்ளது.
அதேவேளை வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் பாலத்திற்கு கீழ் இருந்து 60கிலோகிறாம் எடையுள்ள வெடிமருந்தும், இரண்டு வாகன பற்றறிகளும் இராணுவத்தினரால் இன்றுபகல் கைப்பற்றப்பட்டுள்ளது.