படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை
Read Time:53 Second
மட்டக்களப்பு பெரியகல்லாறிலும் இன்றுகாலை 6மணிமுதல் முற்பகல் 11மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை நேற்று பொலீசார் மீட்டதையடுத்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 50பேர் பயணிக்கக் கூடிய வகையில் பெருமளவு உணவுப்பொருட்களுடன் இப்படகு கண்டுபிடிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகாக இருக்கலாமென்று பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating