கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
கதிர்காமத்துக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த சிறுவன் இராமசந்திரன் லஷான் வயது8என்பனே இவ்வாறு ஆற்றில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது கதிர்காம தரிசனத்திற்கு சென்ற அச்சிறுவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் சம்பவம் தொடர்பில் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் சம்பவத்தில் மரணித்த சிறுவனான லஷான் தாயாருடன் மேலும் சிலருடனுமே கதிர்காம தரிசனத்தை மேற்கொண்டுள்ளான் கதிர்காமத்துக்கு வருதை தந்த மேற்படி யாத்திரை குழுவினர் நேற்றையதினம் காலை 7.45மணியளவில் செல்லக் கதிர்காமத்துக்கு சென்றுள்ளனர் இவ்வாறு சென்றவர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சிறுவன் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளான் என மேலும் தெரிய வருகிறது
Average Rating