பதவிகளை கோராது நாட்டின் நலனுக்காக செயற்படுவேன் -ரோஹித்த போகொல்லாகம
Read Time:1 Minute, 16 Second
எந்தவித பதவிகளையும் கோராது நாட்டின் நலனுக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தபோகொல்லாகம தெரிவித்துள்ளார் அபிவிருத்தி இலக்குகளை எட்டும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவுள்ளதாகவும் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்திப் பணிகளுக்கான பங்களிப்பினை அல்லது அரசியலையோ கைவிடப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளை கோரியதில்லை எனவும் மக்களிடம் வாக்குகளை தவிர வேறு எதனையும் கோரியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிலிருந்து பிரியாவிடை பெற்றுச்சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating