துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது
Read Time:1 Minute, 14 Second
அமெரிக்க அதிபர் ஒபாமாவை, விமானநிலையத்தில் துப்பாக்கியுடன் சந்திக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிபர் ஒபாமா, வார விடுமுறை நாட்களில் ஆஷ்வில்லி பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பார். கடந்த 25ம்தேதி, ஆஷ்வில்லி விமான நிலையத்தில் போலீஸ் காரில் வந்த, ஜோசப் சீன் மெக்வே(23) என்ற நபர் காரிலிருந்து இறங்கியதும், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவரை விசாரித்தனர். அதற்கு அவர் ஒபாமாவை சந்திக்க போவதாக கூறினார். அவர் கைத்துப்பாக்கிவைத்திருந்ததால், பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக, அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இந்த குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டால், ஜோசப்புக்கு 120 நாட்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
Average Rating