நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயார்

Read Time:1 Minute, 15 Second

இலங்கைக்கு வெளியே புலி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தினை கையாள்வது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தமது அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று வெளிவிவகார அமைச்சில் பொறுப்பேற்கும் வைபவத்தின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை நோர்வே, பிரித்தானியா, கனடா, சுவிஸ், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்து பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் முகமாக வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் சத்தியப் பிரமானம்
Next post போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த TMVP பிரேசசபை உறுப்பினர் கைது