உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட சகல கட்டிடங்களும் அகற்றப்படும்
Read Time:1 Minute, 24 Second
உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சகல கட்டிடங்களும் அகற்றப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பு மற்றும் ஏனைய சகல பிரதேசங்களிலும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளகட்டடங்களும் அகற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார் மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி கொழும்பு கண்டி மற்றும் காலி போன்ற முக்கிய நகரங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்படவுள்ளன நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் அவசரகால சட்டத்தின் பல சரத்துகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating