ஜீ.எஸ்.பி.சலுகை நீடிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை குழு ஐரோப்பா விஜயம்
Read Time:1 Minute, 25 Second
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டள்ள ஜீஎஸ்.பி. வரிச்சலுகை திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஐரோப்பாவிற்கு விஜயம் செய்யவுள்ளது எதிர்வரும் 20ம்மற்றும் 21ம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது வெளிவிவகார செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க திறைசேரியின் செயலாளர் பீபி.ஜயசுந்தர நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கமலத் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர் சலுகைத்திட்டத்தை நீடித்துக்கொள்வது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் குறிப்பிடதக்கது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத்திட்டம் இடைநிறுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது
Average Rating