திறந்த மனதுடன் பணியாற்றுவதே தனதுநோக்கம் -ஊடக அமைச்சர்
திறந்த மனதுடன் வெளிப்படையாக பணியாற்றுவதே தனது நோக்கம் எனவும் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதையே தாம் விரும்புவதாகவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நிறுவனத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார பதவியேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார் அமைச்சருடன் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பீ.கனேகலவும் கலந்துக் கொண்டுள்ளார். நிறுவனத்தலைவர் பத்மகுமார பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பத்திரிகைகளில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மத்தியில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தலைவர் என்ற அடிப்படையில் இல்லாமல் சுமூகமான உறவைப் பேணி செயற்படவே விரும்புகிறேன் பெரிய அளவில் பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட சுமூகமாக தீர்த்துவிடலாம் நாட்டை வெற்றியடைய செய்யும் பயணத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating