இப்ப ‘டைவர்ஸ்’ செய்வோம் வீடு வாங்கிய பின் மீண்டும் திருமணம்:சீனாவில் புதிதாய் பிறக்கிறது கலாசாரம்

Read Time:3 Minute, 6 Second

சீனாவில் வீடு வாங்க நினைக்கும் தம்பதி, முதலில், ‘டைவர்ஸ்’ செய்ய வேண்டும்; வீடு வாங்கிய பின், மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தன் உத்தரவால், இந்த புதிய கலாசாரத்திற்கு, சீன அரசு மறைமுகமாக வித்திட்டு விட்டது.கம்யூனிச நாடான சீனாவில் சொத்து வைத்துக் கொள்ள, முன்பு தடை இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் தான், வீடு வாங்க அனுமதி கிடைத்தது. வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட அனுமதி கிடைத்ததும், சீன தலைநகர் பீஜிங்கில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டன. ஒருவரே பல வீடுகளை வாங்கி சொத்து சேர்க்கும் நிலை ஏற்பட்டது. அளவுக்கதிகமான கட்டுமானத்தைக் குறைக்க, சீன அரசு தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஒருவர், முதன்முறையாக வீடு வாங்க, நியாயமான கடன் தொகை வழங்கப்படும்.

இரண்டாவது வீடு வாங்க வேண்டுமானால், அதற்கு முன்பணமாக, வீட்டு மதிப்பின் பாதிப் பணத்தைச் செலுத்த வேண்டும். கடனுக்கான வட்டியும் அதிகமாகச் செலுத்த வேண்டும். மூன்றாவது வீடு வாங்க, மிக அதிக வட்டியும், முன்பணமும் செலுத்த வேண்டும். குடும்பத் திட்டத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடும் கட்டுப்பாட்டால், சீன மக்கள் வீடு வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.ஆனால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், ஒரு உக்தியைக் கையாண்டு, வீடு வாங்க விரும்புபவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர்.

ஏற்கனவே திருமணமாகி, வீடு வாங்கி பத்திரம் பதிவு செய்துள்ளவர்கள், புதிதாக வீடு வாங்க வேண்டும் எனில், தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றோ, விவாகரத்து ஆனவர் என்றோ கூறினால் போதும்; புதிய வீடு வாங்கிக் கொள்ளலாம்.இந்த ஆலோசனை, வீடு வாங்க விரும்பும் தம்பதிக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘டைவர்ஸ்’ செய்து விட்டு, வீடு வாங்கி, பின் மீண்டும் திருமணம் செய்து கொள்ள பலரும் முன்வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாதவர்கள், இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என, காலம் கடத்துகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார்- மீண்டும் மருத்துவமனையில் மரணம்
Next post சிம்புவுடன்அறிமுகமாகும் “போடா போடி”- எதிர்பார்ப்பில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி